ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கி கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்த பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை
1. அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2. உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்ட் க்கு மாற்ற முடியாது.
3. அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.
4. ஒவ்வொரு நாளும் விடியும் போது உங்கள் வங்கி கணக்கில் அந்த நாளில் செலவுக்காக 86,400 ரூபாய் வரவு வைக்கப்படும்.
5.எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தி கொள்ளலாம்.
6. வங்கி முடிந்தது கணக்கு என்று சொன்னால் அவ்வளவு தான் வங்கி கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு வாங்கித்தருவீர்கள் இல்லையா உங்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள் ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டும் செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் அப்படித்தானே முடிந்தவரை உபயோகிப்பீர்கள் தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை நிதர்சனமான உண்மை ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி கணக்கு இருக்கிறது நாம் தான் அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கி கணக்கின் பெயர் காலம் ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது. இரவு தூங்கப்போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான் நேற்றைய பொழுது போனது போனது தான் . ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400 நொடிகள் எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும் அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400 வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்க்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வந்த்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடி கழிக்க மாட்டோமா காலம் நாம் நினைப்பது விட வேகமாக ஓடிவிடும் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக